குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...
x
* திருக்கோவிலூரில் மூட்டை தூக்கும் தொழிலாளி இளங்கோவன். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு காமேஷ்வரன் விஷ்ணுப்பிரியன்  மற்றும் ருத்திரன் என்ற 9 மாத குழந்தை என  மூன்று மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில்,  நேற்றும் சண்டை நடந்துள்ளது. 

* இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தனலட்சுமி, இன்று காலை தனது மாமனாரை டீ வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் உள்ள மண்ணெண்ணெயை குழந்தைகள் மீதும்  தன் மீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பற்றியதில் அவர்கள் அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் நான்கு பேரும் தீயில் கருகி இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்