பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி

அரசு வகுத்த விதிகளின்படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது எப்படி சட்ட விரோதமாகும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி
x
பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது, சிலை வைக்க அரசு விதித்துள்ள விதிகளுக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது அரசியல் கட்சிகள், விதிகளை முறையாக பின்பற்றுகின்றனவா? திருட்டு தனமாக மின்சாரத்தை பயன்படுத்துவதில்லையா? அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படவில்லையா? என்பன உட்பட நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். மேலும், அரசு வகுத்த விதிகளின்படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது எப்படி சட்ட விரோதமாகும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விநாயகர் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளை திரும்பபெற இந்து முன்னணி கோரிக்கை 

சென்னையில் விநாயகர் சதுர்த்தியொட்டி நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை திரும்பப்பெற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தடுத்திடும் வகையில் விதித்து வரும் கட்டுப்பாடுகளை அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்