கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முறையாக வந்து சேராததால், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை
x
காட்டுமன்னார்கோவில் அருகே எடையார், பிள்ளையார்தாங்கள், வவ்வால்தோப்பு, திருநாரையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. கீழணையில் இருந்து ராஜன் வாய்க்கால் மூலம் வரவேண்டிய தண்ணீர், இங்கு முறையாக வராததால், நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற மோட்டார் இன்ஜின் மூலம் வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்