ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...

ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.
ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...
x
ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என சட்டப்பிரிவு 377 தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்