அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் கைது - சிறையில் அடைப்பு

பாதிக்கப்பட்ட பீட்டர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சண்முகநாதனை கைது செய்த போலீசார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் கைது - சிறையில் அடைப்பு
x
புதுக்கோட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்குடி பாரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடமிருந்து சுமார் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பீட்டர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சண்முகநாதனை கைது செய்த போலீசார், காரைக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்