காரைக்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காரைக்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் யசோதா மணி, அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார். அதே நேரத்தில் சிக்கன் குன்யாவால் 2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும்அவர் தெரிவித்தார். காய்ச்சலால் 46 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய அவர், தனியார் மருத்துவமனைக்கு வருவோரின் நோயின் தன்மை குறித்து பொது சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்