சென்னை : பறக்கும் ரயிலை கவிழ்க்க அடுத்தடுத்து சதி..!

வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்ட் ஸ்லாப் வைக்கப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : பறக்கும் ரயிலை கவிழ்க்க அடுத்தடுத்து சதி..!
x
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் கடந்த 31ஆம் தேதி சிமெண்ட் சிலாப் கிடந்தது. இது குறித்து தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, நேரில் சென்று ஆய்வு செய்தார். 

மேலும், இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, 2-வது முறையாக ரயில் தண்டவாளத்தில் நேற்றிரவு சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டுள்ளது. 

ரயில் ஓட்டுநர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வேளச்சேரி, தரமணி, பெருங்குடி ஆகிய இடங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்