சோபியா ஜாமினில் விடுதலை

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாணவி சோபியா, மாலையில் வீடு திரும்பினார்.
சோபியா ஜாமினில் விடுதலை
x
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாணவி சோபியா, மாலையில் வீடு திரும்பினார். தூத்துக்குடி விமானத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் பயணம் செய்த சோபியா, பின்னர் விமான நிலையத்தில், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சோபியாவை , 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  கொக்கிரகுளம் மகளிர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சோபியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே,. சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, உத்தரவிட்டதால், மாலையில், மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

Next Story

மேலும் செய்திகள்