அதிமுக பேரணிக்காக 5,000 புதிய சைக்கிள்கள்

அதிமுக சைக்கிள் பேரணிக்காக கொண்டு வரப்பட்ட ஐந்தாயிரம் சைக்கிள்கள் மழை நீரில் வீணாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பேரணிக்காக 5,000 புதிய சைக்கிள்கள்
x
தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியானது, அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மதுரையில் துவங்கி ராமநாதபுரம், விருதுநகர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. அடுத்தகட்டமாக பிற மாவட்டங்களில் பேரணி நடத்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் ஹரியானாவில் இருந்து மதுரை பாண்டி கோவில் அருகேயுள்ள திடலில் கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் நீர் சூழ்ந்துள்ளதால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்