அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரம் : பேராசியர்களிடம் 3வது நாளாக விசாரணை

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் உதவிப் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடமும் 3 வது நாளாக விசாரணை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரம் : பேராசியர்களிடம் 3வது நாளாக விசாரணை
x
மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 30 பேர் பெயர்களை அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், 3வது நாள் விசாரணையில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் உமா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் 3 பேரை குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் , மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் கணிணி அறை பொறுப்பாளரின் பெயர்களையும் , போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அனைவருக்கும் ஒரு சில தினங்களில் சம்மன் அனுப்பப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்