திருடிய நகைகளை மீண்டும் வைத்து சென்ற விநோத திருடன்

சென்னையில் போலீசாரின் விசாரணைக்கு பயந்து, திருடிய நகைகள் கொள்ளையடித்த வீட்டின் முன்பே வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடிய நகைகளை மீண்டும் வைத்து சென்ற விநோத திருடன்
x
கடந்த 26 ஆம் தேதி, சென்னை,  செம்பியம் பகுதியில் வசித்து வரும் இம்தியாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 70 சவரன் நகையையும், 75 ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  கொள்ளை அடிக்கப்பட்ட இம்தியாஸ் வீட்டின் முன்பு நேற்று  ஒரு பார்சல் இருந்தது. இதை பார்த்த போது, அதில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனை, போலீசார் ஆய்வு செய்த போது அதில் 60 சவரன் நகைகள் இருந்துள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்