மிளகாய் பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞர்...

திருச்செங்கோடு அருகே தனியார் ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவன ஊழியர் மீது, மிளகாய்ப்பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மிளகாய் பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞர்...
x
ஈரோடு மாவட்டம் ஆயக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் தனியார் ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து,  ஆர்டர் செய்த செல்போனை வல்லரசுவிடம் ஒப்படைப்பதற்காக, அந்த நிறுவனத்தின் ஊழியர் கொண்டு வந்துள்ளார். அப்போது வல்லரசு அந்த ஊழியரை தொடர்பு கொண்டு,திருச்செங்கோடு அருகேயுள்ள தான் கொக்கராயன் பேட்டையில் உள்ளதாகவும், அங்கே வந்து செல்போனை தரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த ஊழியரிடம் செல்போனை வாங்கிய வல்லரசு,  பணம் கொடுக்காமல், தமது நண்பர்களுடன் சேர்ந்து ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி விட்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதிமக்கள் வல்லரசுவை பிடித்து மௌசி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்