யாழ் நூலகத்திற்கு 1.05 லட்சம் நூல்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை - கன்னிமாரா நூலகம் 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவித்த பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், யாழ் நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நூல்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
யாழ் நூலகத்திற்கு 1.05 லட்சம் நூல்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
சென்னை - கன்னிமாரா நூலகம் 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவித்த பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், யாழ் நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நூல்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். சென்னையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் இந்த அறிவிப்புகளை, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டார். 

அரசு பள்ளியில் குழந்தைகள் படித்தால் முன்னுரிமை

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், அரசு ஆசிரியர்களாக இருந்தால், இட மாறுதலுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, அவர் குறிப்பிட்டார். முன்னதாக, புத்தக கண்காட்சி நிறைவு விழாவில், சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தார் மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பரிசுகளையும், விருதுகளையும் வழங்கி, கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்