3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 3 நதிகள் சங்கமிக்கும் பகுதியில் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது.
3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு
x
ஈரோடு மாவட்டத்தில் 3 நதிகள் சங்கமிக்கும் பகுதியில் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது. இந்திய முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் 3 நதிகளான பவானி காவிரி மற்றும் அமுதநதி ஆகியவை சங்மிக்கும் இடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதகிருஷ்ணன் பாஜக மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

பாபநாசம் தாமிரபரணியாற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

பாபநாசம் தாமிரபரணியாற்றில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின் இன்று காலை பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது.
 



Next Story

மேலும் செய்திகள்