திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதற்காக அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம், தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்போது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story