முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்ததால் அணைக்கு பேராபத்து - ஸ்டாலின்

முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை முன்கூட்டியே கண்டறிந்து சீரமைக்க தவறியது ஏன்? என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்ததால் அணைக்கு பேராபத்து - ஸ்டாலின்
x
* கொள்ளிடம் பாலம், முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தெரிவித்து வரும் அ.தி.மு.க அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து  சீரமைத்திட தவறியது ஏன்? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்ததால் அணைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றும், மேலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி - கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் முசிறி - நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகி உள்ளதையும் அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

* அணை சீரமைப்பு பணியின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பால தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசு, இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் உள்ள அணைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைக்க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

* தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட, சீரமைப்புப் பணிகளை இனியும் தாமதப்படுத்தாமல், மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்