இருதய அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவி

கரூரை சேர்ந்த மாணவி ஒருவர் இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருதய அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவி
x
கரூர் மாவட்டம் குமாரபாளையம் என்ற பகுதியில் வசித்து வரும் ஜோதிமணி என்பவரின் மகள் அட்சயா. இவருக்கு சிறு வயதில் இருந்தே இருதயத்தில் கோளாறு இருந்து வந்துள்ளது.  மகளின் மருத்துவ செலவுக்கு போதிய பணமில்லாததால் முகநூல் நண்பர்கள் மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் திரட்டப்பட்டது. இந்த நிலையில் தனது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அட்சயா வழங்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்