கராத்தே கலையில் சாதனை படைக்கும் சேலம் வீரர்

கராத்தே கலையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சேலத்தை சேர்ந்த நடராஜ் இதுவரை 81 சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கராத்தே கலையில் சாதனை படைக்கும் சேலம் வீரர்
x
சேலம் மாவட்டம் அத்தனூர் கிராமத்தை சேர்ந்த  இளைஞர் நடராஜூக்கு, சிறுவயது முதலே, கராத்தே கலையில் தீராத காதல். வறுமையால் படிப்பை 8 ஆம் வகுப்போடு நிறுத்திய அவர், கராத்தே-வில் உயரம் தொட்டார். பின்னர் பால சரஸ்வதியை கரம் பிடித்த நடராஜூக்கு 14 வயதில் தேவிப்பிரியா என்ற மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். இவர்களும் தந்தையைப் போலவே கராத்தே, யோகா, சிலம்பக் கலைகளில் கைதேர்ந்துள்ளனர். 

இந்நிலையில், கராத்தே-யில் இதுவரை 81 சாதனைகளைப்  படைத்துள்ள நடராஜ், கின்னஸ் சாதனை படைக்க தயாராகி வருகிறார். ஆனால் இதுவரை இந்த சாதனையாளரை அரசு கண்டுகொள்ளவில்லை என்பதே அவரது குறையாக உள்ளது.வறுமையில் வாடும் தங்களுக்கு, அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், கணவருக்கு அரசு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதும் நடராஜின் மனைவி பால சரஸ்வதியின் கோரிக்கை.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய கணவரை, எம்.ஏ., வரை படிக்க வைத்தவர் அவரது மனைவிதான். ஆனாலும் இன்னும் தங்களுக்கு விடியல் கிடைக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்