நெல்லை காய்கனி சந்தையில் வரத்து குறைவு : விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
நெல்லை காய்கனி சந்தையில் வரத்து குறைவு : விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் அடைந்துள்ளது. காவல் கிணறு காய்கறி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, பணகுடி, பழவூர் ஆகிய பகுதிகளில் விளையும் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்