நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார்.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு
x
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர், சாலை மார்க்கமாக பவானி செல்கிறார். 

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிப்பாளையம், ஈரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறார். 

ஈரோட்டில் நடைபெறும் வெள்ள சேதம் குறித்த ஆய்வு கூட்டத்திலும் 
முதலமைச்சர்  பங்கேற்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்