5 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் மருத்துவமனை - அவதிப்படும் பொது மக்கள்

7 லட்சம் ரூபாய் செலவில், அரசு தாய் - சேய் நல விடுதி கட்டப்பட்டது.
5 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் மருத்துவமனை - அவதிப்படும் பொது மக்கள்
x
சேலம் மாநகராட்சியின் 22வது கோட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி காலனியில், 2008-09ம் ஆண்டு, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 7 லட்சம் ரூபாய் செலவில், அரசு தாய் - சேய் நல விடுதி கட்டப்பட்டது. தொடக்கத்தில் பிரசவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், காலப்போக்கில், மருத்துவ உபகரணங்கள் இல்லை எனக்கூறி, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே மருத்துவமனை செயல்பட்டது.  இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக, மருத்துவமனை பூட்டிக் கிடக்கிறது. இதனால், இந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவ வசதியின்றி அவதிப்படுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்