ராமநாதபுரம் கரிய மல்லம்மாள் கோவில் ஆடி பொங்கல் விழா : நூதன முறையில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் உள்ள கரியமல்லம்மாள் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த நான்காம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் உள்ள கரியமல்லம்மாள் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த நான்காம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற முளைப்பாரி விழாவில் பக்தர்கள் சாக்கு உடை அணிந்து, இலந்தை முள்ளில் படுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Next Story