தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்
x
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆளுநர் மாளிகையில்  நடந்த விழாவில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

* இந்த விழாவின் போது அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பின்னால்,  உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்க பட்டிருந்ததாக அவர் அதிருப்தி  அடைந்துள்ளார்.

* நீதிபதிகளின் இருக்கை ஒதுக்கீடு  தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் விடுத்த கோரிக்கையையும் ஆளுநர் மாளிகை நிராகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

* இது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ,  இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்