தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்
தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
* இந்த விழாவின் போது அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பின்னால், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்க பட்டிருந்ததாக அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
* நீதிபதிகளின் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் விடுத்த கோரிக்கையையும் ஆளுநர் மாளிகை நிராகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
* இது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் , இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Next Story