திருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களிடம் இருந்து 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்
x
ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்ப திருவிழா நிறைவடைந்த நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் ஜெய்சங்கர் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்