சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம்

பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம் சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம்
x
* பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம், மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றிய  ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 


* இதில், சமூக மூலதனம், காவல் துறை செயல்பாடு, வன்கொடுமை தடுப்பு, கடும் குற்றங்கள் குறைப்பு, குழந்தைகள் நலன் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கல்வி வசதிகள், நீதி வழங்கல், வனப்பரப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பு, கழிவு மேலாண்மை, நிலையான வேளாண்மை மற்றும்   நீர் ஆதார மேலாண்மை,, மருத்துவ வசதிகள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலன்  பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு ஆகிய துறைகளில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்