ஆட்டோவில் சென்று அதிரடியாக சிலையை மீட்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

காரில் கடத்தப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை ஆட்டோவில் துரத்திச் சென்று மீட்டார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்
ஆட்டோவில் சென்று அதிரடியாக சிலையை மீட்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல்
x
* போரூர் காரம்பக்கம் பகுதியில் காரில் அம்மன் சிலை கடத்தப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

* இதையடுத்து,  அவரது தலைமையில், நேற்று மாலை, 3 ஆட்டோக்களில் அங்கு சென்ற போலீஸார், வங்கி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த காரை மடக்கினர்.

* காருக்குள், தாலியுடன் வழிபாட்டில் இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமும், 20 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் சிலை இருந்தததை அடுத்து, அதனை மீட்டனர்.  இதையடுத்து காரில் இருந்த நான்கு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

* அந்த சிலை திருவள்ளூர் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரிந்தது. மேலும், சிலையை 50 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக கடத்தி வரப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்