இடிந்துவிழும் நிலையில் நூலகம் - மாணவர்கள் அச்சம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்துக்கு வரும் மாணவர்கள் அச்சத்துடனே படித்து செல்கின்றனர்.
இடிந்துவிழும் நிலையில் நூலகம் - மாணவர்கள் அச்சம்...
x
இடிந்துவிழும் நிலையில் நூலகம்...



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். பல மாணவ, மாணவிகள் அரசு போட்டி தேர்வுகளுக்கும் நூலகத்தில் வந்து படித்து ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நூலகம் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில், புத்தங்களும் நனைந்து சேதமடைகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் நூலகம் உள்ளதால், படிக்க வருவதற்கே அச்சமாக இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்