இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு

சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு
x
* திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேசிய தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களும்  மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

* இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

* அவரை விமானநிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்  , மற்றும் அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.



* விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன்  காரில், காவிரி மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் சென்றார். அங்கு கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நான்காவது மாடிக்குச் சென்ற அவர், கருணாநிதியை நேரில் சந்தித்தார்.

* அங்கு மருத்துவர்களிடம்   கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்  நலம் குறித்து விசாரித்தார். 



* தமிழக முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். 



* இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியை சென்னையில் சந்தித்ததாகவும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித்தனியாக இரண்டு பதிவுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்