பவானிசாகர் அணையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு

பவானிசாகர் அணையை மேலே சென்று பார்க்க ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே அனுமதி என்பதால், இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
பவானிசாகர் அணையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு
x
சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணையின் மேற்பகுதியை காண ஆடிப்பெருக்கு தினத்தன்று மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிப்படுவது வழக்கம். இதையடுத்து, இன்று ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு மேலே சென்று பார்த்து ரசித்தனர். இங்குள்ள பூங்கா குளத்தில் படகுசவாரி செய்ய பலர் ஆர்வம் காட்டினர். சிறுவர் - சிறுமியர்கள், நீச்சல் குளத்தில் குளிப்பது, ஊஞ்சலில் விளையாடுவது என ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்