"233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு  ரூ.23 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அறிவிப்பு
x
கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த  கோரி, லண்டனில் பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை மற்றும் நிதி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்