மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெட்டி படுகொலை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் பி.ஏ.வான பூபதி கண்ணன் என்பவர் கள்ளக்காதலியுடன் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெட்டி படுகொலை
x
திருச்சி அருகே மாத்தூரை அடுத்த அரைவட்ட சாலையில், காருடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொள்கின்றனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேசனின் நேரடி உதவியாளரான பூபதி கண்ணன் என்பது தெரிய வருகிறது.
அதிர்ச்சியடைந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்,மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரித படுத்துகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பூபதி கண்ணனின் மனைவியிடம் விசாரித்ததில், கடைசியாக கணவரிடம் பேசுகையில், வெளியூரில் இருப்பதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூறியதாக தெரிவிக்கிறார். அடுத்ததாக போலீசார் தொழில்நுட்ப உதவிகளை நாடுகின்றனர்... பூபதி கண்ணன் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆட்சியர் அலுவலகத்தில் அவருடன் டைப்பிஸ்ட் ஆக பணிபுரியும் சவுந்தர்யா என்பவர் சிக்குகிறார்.பூபதி கண்ணனின் கார் சென்ற இடங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததிலும், அவருடன் சவுந்தர்யா சென்றது உறுதியாகி இருக்கிறது.சவுந்தர்யாவை பற்றி விசாரித்தால்,அவரும் கொடூர பின்னணியை கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த சவுந்தர்யா, அதன் பின் வேளாண் துறையில் பணிபுரிந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தும் , தனது கள்ளத்தொடர்பை சவுந்தர்யா கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதில் மன உலைச்சலுக்கு ஆளான இவரது கணவர் சுரேஷ், தற்கொலை செய்துகொள்கிறார். பணியில் இருக்கும் போது கணவர் இறந்ததால் தான் சவுந்தர்யாவிற்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால் இங்கும் சவுந்தர்யா பூபதி கண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

சவுந்தர்யாவை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முரண்பாடான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.பூபதி கண்ணனுடன் காரில் சென்று திருச்சி மாவட்டம் மாத்தூரை அடுத்த அரைவட்டம் பகுதியில், இருவரும் தனிமையில் இருந்தபோது, மர்ம நபர்கள் நான்குபேர் திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறுகிறார். 

சினிமா காட்சிகளில் வருவது போல், பூபதி கண்ணன் அவர்களை தடுத்து சவுந்தர்யாவை தப்பிக்க வைத்துவிட்டு, தன் உயிரை இழந்துவிட்டதாக தெரிவிக்கிறார் சவுந்தர்யா.இந்த தகவல்களில் போலீசாருக்கு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளதால், தொடர்ந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார் சவுந்தர்யா,முன்னாள் கள்ளக்காதலனை வரவைத்து பூபதி கண்ணனை தீர்த்து கட்டினாரா, அல்லது வேறு முன்பகை ஏதேனும் இருக்கிறதா என பல கேள்விகளுடன் சவந்தர்யாவிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. எனவே இச்சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்