திமுக-வினர் பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
மருத்துவர்களின் சிகிச்சையால் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவதாக அறிக்கையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் திமுக-வினர் ஈடுபட வேண்டாம் என்றும், கருணாநிதியை மதிப்பது அவர் கட்டிக்காத்து வந்த கொள்கையை மதிப்பதுதான் என அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.மருத்துவமனை முன்பு பூசணிக்காய் உடைப்பது, கூட்டுப் பிரார்த்தனையில் சிலர் ஈடுபட்ட படத்தை பார்த்து வேதனை அடைந்ததாக கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிமுகவில் நிகழ்ந்த மூடநம்பிக்கை சம்பவங்கள் தி.மு.க.விலும் நுழைத்துவிட சிலர் முயற்சி செய்யக்கூடும் என அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Next Story