தமிழகத்தில் விவசாயிகள் பாதுகாப்புடன் உள்ளனர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
விவசாய துறைக்கு 3 முறை மத்திய அரசு விருது கிடைத்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசு விவசாய துறை சிறப்பாக செயல்படுவதால் மத்திய அரசு 3 முறை விருது வழங்கி கவுரவித்ததாக குறிப்பிட்டார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் பொன்னையன், நடிகர் குண்டு கல்யாணம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் விவசாயிகள் பாதுகாப்புடனும், வளமாகவும் இருப்பதாக குறிப்பிட்டார்.
Next Story