ரயிலில் படியில் பயணித்த 2 பேர் பலி - தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த பரிதாபம்

மின்சார ரயிலின் படியில் தொங்கிய படி பயணித்த 2 பேர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தனர்.
ரயிலில் படியில் பயணித்த  2 பேர் பலி - தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த பரிதாபம்
x
சென்னை கடற்கரையில் இருந்து நேற்று இரவு செங்கல்பட்டு நோக்கி  விரைவு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படியில் தொங்கியபடி பயணம் செய்த 2 பேர் பரங்கிமலை பகுதியில் தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்துள்ளனர்.  சம்பவ இடத்திலேயே  இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் ரயில்வே காவல்துறையினர், விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ்  என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்