மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடிநீர் திறப்பு...

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடிநீர் திறப்பு...
x
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவான 120 அடியை, எட்டி உள்ளது.  இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.இரவு 10 மணி நிலவரப்படி 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து  மேட்டூரை சுற்றியுள்ள, 21 வருவாய் கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு கரையோர கிராமத்திற்கும் நேரில் சென்ற காவல்துறையினர் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களை அறிவறுத்தி வருகின்றனர்.

மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும்  ஆபத்தான பகுதிகளில் நின்று பொதுமக்கள் புகைப்படங்கள் மற்றும்  செல்பி எடுத்து கொள்கின்றனர். காவல்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களை உண்டாக்க கூடும் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதேபோல் கல்லணைக் கால்வாய், காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகள் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.  ஆற்றில் நின்று செல்பி எடுத்தல்,  குளித்தல், 
மீன்பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.










Next Story

மேலும் செய்திகள்