முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்து முதல்வர் ஆலோசனை

39 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது, மேட்டூர் அணை : வெள்ள பாதிப்புகளை தடுக்க, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்து முதல்வர் ஆலோசனை
x
மேட்டூர் அணை நிரம்பி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தொலை நோக்கு திட்டம் 2018 - 2030 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பேரிடர்களால், ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்