பவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஈரோடு பவானிசாகர் அணை அருகேயுள்ள பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் பாலத்தின் மீது செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓட்டை விழுந்து நான்கு மாதங்கள் ஆகியும், அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலத்தை பயன்படுத்த முடியாததால், புங்கார், பெரியார் நகர், கொத்தமங்கலம், பட்டரமங்கலம், கல்லாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்