முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு
x
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய் மூலம் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

"கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை"

காவிரி ஆற்றிற்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகளவில் இருப்பதால், காவிரி கரையோரம், கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீரில் இறங்கி குளிக்க கூடாது என்றும், கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பது மற்றும் செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்