நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டி கேட்ட மாற்று திறனாளிக்கு அடி உதை

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டி கேட்ட மாற்று திறனாளிக்கு அடி உதை
நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டி கேட்ட மாற்று திறனாளிக்கு அடி உதை
x
மாற்று திறனாளிக்கு அடி உதை

மதுரை பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் சென்ற அரசு பேருந்து ஒன்று, சமய நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தூரம் தள்ளி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் ஓடிப்போய் ஏறிய பின்னர் ஒரு மாற்றுத் திறனாளி பயணி கடைசியாக வந்து ஏறியுள்ளார். பின்னர், அவர், நிறுத்தத்தில் நிற்காதது குறித்து ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரும் அவரை திட்டியதோடு, சரமாரியாக அடித்து பெருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Next Story

மேலும் செய்திகள்