ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு - மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு - மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்
x
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 10-வது நாளாக நீடிக்கிறது. 

இந்நிலையில், காவிரி கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 25 இடங்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட  வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டதை  தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், வருவாய், தீயணைப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்