சென்னையில் 12 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - 200 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்

சென்னையில் 12 வயது மாணவியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 12 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - 200 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்
x
சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் சென்னையில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகள், விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவர், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது அவரின் தங்கை அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து இருக்கிறார். 

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர்கள் 8 பேர், தண்ணீர் கேன் விநியோகம் செய்பவர்கள், காவலாளி, எலெக்ட்ரீஷியன் என 17 பேர் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக 12 வயது மாணவி, தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். மேலும், நடந்ததை வெளியே கூறாமல் இருப்பதற்காக தனக்கு போதை ஊசி போடப்பட்டதாகவும், கத்தி முனையில் பலமுறை பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக, அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,  3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்