கருகிய பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலி - சோகம் சூழ்ந்த கும்பகோணம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 14-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கருகிய பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலி - சோகம் சூழ்ந்த கும்பகோணம்
x
கடந்த 2004-ஆம் ஆண்டு ஜுலை 16-ஆம் தேதி கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அந்த பள்ளியின் முன்பாக உயிரிழந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களை ஒன்றாக பதிவிட்டு, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பிற்பகலில் அரசு கட்டியுள்ள நினைவு மண்டபத்தில் மலர் அஞ்சலி நிகழ்ச்சியும், இன்று இரவு மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்