நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி
x
சென்னையில் அபிராமபுரம், அண்ணாநகர், போயஸ் தோட்டம் உள்பட 5 இடங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. சென்னையில் இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, தற்போது வரை நீடித்து வருகிறது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.பி.கே நிறுவனம் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் மேற்கொண்டு, பல பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை

இதேபோல், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜ் செய்யாதுரைக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், மற்றும் அவருக்கு சொந்தமான மில், கல்குவாரிகளிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. 6 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்