13 பிள்ளைகள் பெற்ற தாய் அனாதையாக விடப்பட்ட அவலம் - ஆதரவு தந்த அன்பு மனிதர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அந்தோனிஅம்மாள் 95 வயது நிரம்பிய மூதாட்டியான இவர் 13 பிள்ளைகள் பெற்றெடுத்தும் இன்று அனாதையாகி நிற்கிறார்.
13 பிள்ளைகள் பெற்ற தாய் அனாதையாக விடப்பட்ட அவலம் - ஆதரவு தந்த அன்பு மனிதர்கள்.
x
பிள்ளைகள் தான் கைவிட்டு விட்டன என்றால், மதுவிற்கு அடிமையான கணவரும் அந்தோனி அம்மாளை அடித்து துரத்தியிருக்கிறார். 

வேறு வழியின்றி, வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார் அந்தோனியம்மாள், ஆனால் அங்கும் அவருக்கு அவமானமே மிஞ்சியுள்ளது. அங்கிருந்தும் துரத்தி விடப்படுகிறார். கிழிந்த உடையுடன் சாலையோரத்தில் பரிதாபமாய் கிடக்கும் அவரை கண்ட அப்பகுதி மக்கள் அவ்வப்போது டீ, வடை வாங்கி கொடுத்து வந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அவற்றை உண்டு தான் உயிர் வாழ்ந்துள்ளார் அந்தோனி அம்மாள்.

எலும்பும் தோலுமாய், சாலையோரத்தில் கிடந்த அந்தோனியம்மாளை வெறும் துணியென நினைத்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது ஏறி சென்றுள்ளது. இதில் காலில் முறிவு ஏற்பட்டு, நகரமுடியாமல் கிடக்கிறார் அந்தோனியம்மாள். இவரின் நிலை கண்டு பரிதாபம் அடைந்த மணிமாறன் என்பவர், அவருக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியுள்ளார். அவர் 13 பிள்ளைகளுக்கு தாய் என்பதை அறிந்த மணிமாறன், கைவிட்ட பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மனுவை பெற்றுகொண்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்,அந்தோனி அம்மாவை காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்