கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள்...

கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு. அமைச்சர்கள் செங்கோட்டையன்,கருப்பண்ணன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள்...
x
கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், அணையில் இருந்து கால தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்தாண்டு, பருவமழை சீராக பெய்ததால் அணை 84 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்