"சிலைகள், நகைகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் வேண்டுகோள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள், நகைகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலைகள், நகைகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் வேண்டுகோள்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஐம்பொன்னால் ஆன தண்டாயுதபாணி சிலை மற்றும் சூலாயுதம் ஒன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலை காணாமல் போனது குறித்து, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் இதுவரை கருத்து ஏதும் கூறாதது பக்தர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள், நகைகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, அதனை வெளியிட வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்