செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.

தென்காசியை அடுத்த செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
x
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரயில் சேவை தொடங்கியது. ரயிலை இயக்கிய ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு பொதுமக்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ரயிலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்