ஆயுதப்படை காவலருக்கு அரிவாள் வெட்டு
தாம்பரம் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஞானசேகரன், பணியை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். தாம்பரம் ரயில்நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், காவலரின் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளார். செல்போன் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் கையை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஞானசேகரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காவலரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜவேலுவை தொடர்ந்து, கடந்த 5 தினங்களில் மேலும், இரு காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.