பேச்சியம்மனுக்கு அசைவ உணவுகள் படையலிட்டு பெண்கள் வழிபாடு

மயிலாடுதுறை அருகே வேண்டுதல் நிறைவேற பேச்சியம்மனுக்கு படையலிட்டு தொட்டில் கட்டி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.
பேச்சியம்மனுக்கு  அசைவ உணவுகள் படையலிட்டு பெண்கள் வழிபாடு
x
மயிலாடுதுறை அருகே வேண்டுதல் நிறைவேற பேச்சியம்மனுக்கு படையலிட்டு தொட்டில் கட்டி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை சின்ன மாரியம்மன் ஆலயத்தில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மனுக்கு ஆனி மாதத்தையொட்டி மகாராணி அலங்காரம் செய்து அசைவ உணவுகள், பழங்கள் மற்றும் இனிப்பு பண்டங்களை படையலிட்டு ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். திருமண தடை நீங்கவும், திருமணமான பெண்களுக்கு பிள்ளைபேறு கிடைக்கவும் வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், புதிதாக திருமணமான தம்பதிகள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத 
தம்பதிகள் தொட்டில் கட்டி வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்