வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றி கொலை - சென்னையில் கொடூரம்

வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி வீட்டின் பணிப்பெண் வெந்நீர் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றி கொலை - சென்னையில் கொடூரம்
x
சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் தொழிலதிபர் முருகானந்தம் வீட்டில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி, பணிப்பெண்ணாக வேலை செய்தார். மகாலட்சுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வீட்டிலேயே மருத்துவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு மகாலட்சுமி உயிரிழந்தார். தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாருக்கு,  மகாலட்சுமியின் உடலில் ரத்தக்காயங்களும், சூடு வைத்த காயங்களும் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, முருகானந்தத்தின் மனைவி சுஷ்மிதாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். வீட்டில் வளர்த்த நாய் குட்டியை மகாலட்சுமி அடித்து கொன்றுவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுஷ்மிதாவும், உறவினர் மித்ராட்சியும் சேர்ந்து, பணிப்பெண் மீது வெந்நீரை ஊற்றி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்